அன்னதான திட்டத்திற்கு ரூ.34.59 லட்சம் நன்கொடை
சென்னை:
தமிழகக் கோவில்களில் நடைபெறும் அன்னதானத் திட்டத்திற்காக 3 தொழிலதிபர்கள், ஒரு கல்வியாளர்உள்ளிட்டவர்கள் ரூ.34.59 லட்சம் நன்கொடை அளித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட இந்த அன்னதானத்திட்டத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இதையடுத்து இதற்காக நன்கொடைஅளிப்பவர்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி, சத்யபாமா பொறியியல் கல்லூரி நிறுவனர் ஜேப்பியார் மற்றும்இரண்டு தொழிலதிபர்கள் ஆகியோர் தலா ரூ.5 லட்சம் தொகையை இந்த அன்னதானத் திட்டத்திற்காக வழங்கினர்.
ஜெயலலிதாவைச் சந்தித்து அவர்கள் இத்தொகைக்கான காசோலையை வழங்கியதாக இன்று தமிழக அரசுவெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர ஏழு அமைச்சர்களும் அன்னதானத் திட்டத்திற்காக லட்சக் கணக்கான ரூபாயை நன்கொடையாகஅளித்துள்ளனர் என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications