கணவருக்கு வி.டி.: புது மனைவி தற்கொலைக்கு முயற்சி
சென்னை:
கணவருக்கு வி.டி. எனப்படும் பால்வினை நோய் இருந்தது தெரிய வந்ததால், கல்யாணம் செய்த சிலநாட்களிலேயே புது மனைவி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
சென்னையில் இந்தப் பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.
புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவருக்கும், திருவொற்றியூரைச் சேர்ந்த நளினி என்றபெண்ணுக்கும் கடந்த மாதம் 21ம் தேதி கல்யாணம் நடந்தது.
திருமணமாண அடுத்த நாளே கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் ரமேஷ் பாபு. இதையடுத்து அவர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ரமேஷ் பாபுவுக்கு வி.டி. எனப்படும் பால்வினை நோய் இருப்பதாகத்தெரிவித்தனர்.
இதனால் நளினி பெரும் அதிர்ச்சியடைந்தார். தனது வாழ்க்கையே போய் விட்டது என்று மனம் உடைந்த அவர்தற்கொலை செய்ய முடிவெடுத்து, தன்னுடைய வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டார்.
இதைக் கண்டு பதறிப் போன குடும்பத்தினர் உடனடியாக நளினியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications