இந்தியாவில் எய்ட்ஸ் மிக வேகமாக பரவுகிறது: ஐ.நா. சபை
லண்டன்:
இந்தியாவில் எய்ட்ஸ் மிக வேகமாகப் பரவி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 40 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டுள்ளதாகவும் உலகில் அதிகமான எய்ட்ஸ்நோயாளகளைக் கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா மாறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதிக அளவில்எய்ட்ஸ் நோயாளிகள் கொண்ட முதல் நாடு தென் ஆப்பிரிக்கா.
2001ம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் எய்ட்ஸ் நோய் தாக்குதல் 1 சதவீதத்துக்கு கொஞ்சம் குறைவாகஇருந்தது.
ஆந்திரா, தமிழ்நாடு:
ஆந்திரப் பிரதேசத்தில் மருத்துவப் பரிசோதனைக்கு வந்த பெண்கள் இடையே எய்ட்ஸ் தாக்குதல் 2 சதவீதமாகஇருந்தது. அடுத்தபடியாக கர்நாடகம், மகாராஷ்டிரம், மணிப்பூர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் எய்ட்ஸ் நோய்தாக்குதல் 1 சதவீதக்குக்கும் அதிகமாக உள்ளது.
ஆசியா, ஆப்பிரிக்கா, கரீபியன், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் எய்ட்ஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது.
போட்ஸ்வானாவில் குழந்தைகள் தவிர்த்த பிற மக்களில் 39 சதவீதம் பேருக்கு எய்ஸ்ட் உள்ளது. 2 ஆண்டுகளுக்குமுன் இது 36 சதவீதமாக இருந்தது.
ஜிம்பாப்வேயில் 33 சதவீதம் மக்களுக்கு எய்ட்ஸ் உள்ளது.
உலக அளவில் 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் அதிக அளவில் எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்குஉள்ளாகி வருகின்றனர்.
உலகம் முழுவதும் தினந்தோறும் சராசரியாக 6,000 பேர் எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்டு எய்ட்ஸ் நோய்தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு தெரிவிக்கிறது.