தமிழ் தீவிரவாதிகளை பிடிக்க தனிப்படைகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் தேசிய மீட்சிப் படை, தமிழ்நாடு விடுதலைப் படை ஆகிய தீவிரவாத அமைப்புகளுககு மத்திய அரசு தடைவிதித்துள்ளதையடுத்து அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார்ஈடுபட்டுள்ளனர்.
ஜெங்குண்டத்தில் தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த வேல்முருகன் என்பர் கைது செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் இவர்களைப் பிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொடோ சட்டத்தின் கீழ் இந்த அமைப்புகளை தடை செய்யுமாறு மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதாகோரிக்கை விடுத்தார். இதையடுத்து இந்த அமைப்புகள் தடை செய்யப்பட்டன.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலின்போது தான் இந்தப் படைகள் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் சேர்ந்து காட்டுப்பகுதியில் இயங்கி வருவது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications