ஜெ. திருந்தினால் ஆதரிப்பேன்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

ஆளும் ஜெயலலிதா அரசின் அராஜகங்கள் தொடர்ந்தால் அடுத்த 3 மாதத்தில் திமுக சிறை நிரப்பும்போராட்டத்தில் ஈடுபடும் என அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஸ்டாலினின் மேயர் பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து திருச்சியில் நேற்று இரவு பொது கூட்டத்தில் கருணாநிதிபேசியதாவது:

ஜெயலலிதா அரசு போலீஸ் துணையுடன் அராஜகத்தை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

அடாவடித்தனத்துடன் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிக்கிறார் அந்த அம்மையார். சர்வாதிகாரம்தலைந்தோங்கி வருகிறது. திமுக என்றும் வேட்டு முறையை நம்பியதில்லை. ஓட்டுமுறையைத் தான்நம்பியிருககிறது. அடாவடியில் நமக்கு நம்பிக்கை கிடையாது.

ஜெயலலிதா திருந்தி மக்களுக்காக நல்லபடியாக ஆட்சி நடத்தினால் அடுத்த 4 ஆண்டுகளும் அவரை ஆதரிக்கத்தயாராக இருக்கிறேன். மாறாக போலீசாரை வைத்துக் கொண்டு எங்களை ஒடுக்க நினைத்தால் அடுத்த 3 மாதத்தில்சிறை நிரப்பும் போராட்டத்தில் திமுக ஈடுபடும் என்று எச்சரிக்கிறேன்.

திமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்தப் பணி 3 மாதத்தில் முடிவடைந்தவுடன் மாபெரும்போராட்த்தைத் தொடங்குவோம். அதற்குள் இந்த ஆட்சியாளர்கள் திருந்திவிட்டால், அவர்களை நிச்சயம்ஆதரிப்போம்.

நான் கொண்டு வந்தேன் என்ற ஒரே காரணத்துக்காக பல நல்ல திட்டங்களை ஜெயலலிதா முடக்கிவிட்டார்.கேட்டால் நிதித் தட்டுப்பாடு என்கிறார்.

அதிமுகவின் அடக்குமுறை அரசியலை ஒழித்துக் கட்ட திமுக எல்லா ஜனநாயக முறைகளையும் பின் பற்றிபோராடும் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+