அனைத்து கிராமங்களிலும் இன்டர்நெட்: ஜெ.
சென்னை:
2010ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் சாலைகள், மின் வசதி, தொலைபேசி, இன்டர்நெட்வசதிகள் இருக்கும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் இன்று மாநாடு நடந்தது. இந்தியாவின் முக்கியதொழில்துறை நிறுவனங்களின் உரிமையாளர்களும் மூத்த அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். இக் கூட்டத்தில்ஜெயலலிதா பேசியதாவது:
தமிழகம் விரைவில் தனது புதி தொழில்துறைக் கொள்கையை அறிவிக்கும். தொழில்துறையினருக்கு கூடுதல்சலுகைகள் தரப்படும். அரசு நிர்வாகம் தொழில்துறையினருக்கு ஆதரவாக இருக்கும்.
பயோ -டெக்னாலஜி, இன்பர்மேசன் டெக்னாலஜி, ஜெனிட்டிக் இன்ஜினியரிங், தொலைத் தொடர்பு ஆதியதுறைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும்.
தமிழகத்தின் உற்பத்தியை அடுத்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக்குவோம். தமிழக அரசு என்னவெல்லாம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து நீங்களும் யோசனை சொல்லலாம் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications