புலி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாண்டிச்சேரி அரசு முடிவு
பாண்டிச்சேரி:
விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அமைப்புகள், நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாண்டிச்சேரிமாநில அரசும் அறிவித்துள்ளது.
புலிகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் தண்டனையில் இருந்து தப்பி பாண்டிச்சேரியில்அவர்கள் நுழைய வாய்ப்புள்ளதாகவும் அம் மாநில அரசு கூறியுள்ளது.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அம் மாநில கல்வியமைச்சர் லட்சுமிநாராயணன் இன்றுஅவசரமாக நிருபர்களிடம் கூட்டத்தைக் கூட்டினார். அவர் கூறுகையில்,
புலிகளின் ஆதரவாளர்கள் மீது எங்கள் அரசும் நடவடிக்கை எடுக்கும். இவர்கள் மீதான கண்காணிப்பை எங்கள்போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் இருந்து தப்பி பாண்டிச்சேரிக்குள் நுழையும் புலிகளின்ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அம் மாநில காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கூறுகையில்,
வைகோ மீது நடவடிக்கை எடுப்பது நல்ல முடிவாகும். அதே போல பழ.நெடுமாறன் போன்றவர்களையும்சுந்திரமாக செயல்பட விடக் கூடாது. பெடோ சட்டத்தை கருணாநிதி ஆதரித்தார். இப்போது அதை வைகோவுக்குஎதிராக பயன்படுத்துவதை அரசியல்ரீதியிலானது என்று வர்ணிக்கிறார். கருணாநிதியின் இந்தப் பேச்சு கடுமையானகண்டிக்கத்தக்கது என்றார்.












Click it and Unblock the Notifications