பொள்ளாச்சி அருகே கள்ள நோட்டு வைத்திருந்த பெண், 5 பேர் கைது
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே கள்ள 100 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்த ஒரு பெண் உள்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
தமிழகத்தில் சமீப காலத்தில் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இது தொடர்பாகஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி அருகே கப்பலாங்கரை என்ற ஊரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பைக்கில் வந்து கொண்டிருந்த இரண்டு பேர் நிற்காமல் வெகு வேகமாகச் சென்றனர். உடனடியாகஜீப்பில் அவர்களைத் துரத்திய போலீசார் அந்த இரண்டு பேரையும் வளைத்துப் பிடித்தனர்.
பின்னர் அந்த நபர்கள் வந்த பைக்கைச் சோதனையிட்ட போது அதில் ரூ.5,000 மதிப்புக்கு 100 ரூபாய் கள்ளநோட்டுக்கள் இருந்ததை அப்போது போலீசார் கண்டுபிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரூ.80,000க்கு 100 ரூபாய் கள்ள நோட்டுக்கள் வைத்திருந்ததாகவும்மீதமுள்ள ரூ.75,000க்கான கள்ள நோட்டுக்கள் இருக்கும் இடம் குறித்து அந்நபர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
அவர்களைக் கைது செய்த போலீசார் அங்குள்ள ஒரு வீட்டில் நடத்திய அதிரடிச் சோதனையில் அனைத்துக் கள்ளநோட்டுக்களும் பிடிபட்டன. அவற்றைப் போலீசார் கைப்பற்றினர்.
பின்னர் அந்த வீட்டிலிருந்த ஒரு பெண் உள்பட நான்கு பேரைக் கைது செய்தனர்.
இச்சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உள்பட மேலும் 5 பேரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications