பொள்ளாச்சி அருகே கள்ள நோட்டு வைத்திருந்த பெண், 5 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே கள்ள 100 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்த ஒரு பெண் உள்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

தமிழகத்தில் சமீப காலத்தில் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இது தொடர்பாகஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி அருகே கப்பலாங்கரை என்ற ஊரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பைக்கில் வந்து கொண்டிருந்த இரண்டு பேர் நிற்காமல் வெகு வேகமாகச் சென்றனர். உடனடியாகஜீப்பில் அவர்களைத் துரத்திய போலீசார் அந்த இரண்டு பேரையும் வளைத்துப் பிடித்தனர்.

பின்னர் அந்த நபர்கள் வந்த பைக்கைச் சோதனையிட்ட போது அதில் ரூ.5,000 மதிப்புக்கு 100 ரூபாய் கள்ளநோட்டுக்கள் இருந்ததை அப்போது போலீசார் கண்டுபிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரூ.80,000க்கு 100 ரூபாய் கள்ள நோட்டுக்கள் வைத்திருந்ததாகவும்மீதமுள்ள ரூ.75,000க்கான கள்ள நோட்டுக்கள் இருக்கும் இடம் குறித்து அந்நபர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

அவர்களைக் கைது செய்த போலீசார் அங்குள்ள ஒரு வீட்டில் நடத்திய அதிரடிச் சோதனையில் அனைத்துக் கள்ளநோட்டுக்களும் பிடிபட்டன. அவற்றைப் போலீசார் கைப்பற்றினர்.

பின்னர் அந்த வீட்டிலிருந்த ஒரு பெண் உள்பட நான்கு பேரைக் கைது செய்தனர்.

இச்சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உள்பட மேலும் 5 பேரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+