ஓடும் பஸ் மீது துப்பாக்கியால் சுட்ட நரிக்குறவர்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு அருகே ஓடும் பஸ் மீது துப்பாக்கியால் சுட்ட ஒரு நரிக்குறவரைப் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூரிலிருந்து வேலூருக்கு ஒரு அரசு பஸ் இரவில் சென்று கொண்டிருந்தது. சேத்துப்பட்டு அருகேஉலகம்பட்டு மற்றும் செம்மாம்பாடிக்கு இடையே பஸ் வந்து கொண்டிருந்த போது யாரோ ஒருவன் அந்த பஸ் மீதுதுப்பாக்கியால் சுட்டு விட்டு ஓடி விட்டான்.
இதில் டிரைவர் மதிவாணனின் காலில் குண்டு பாய்ந்தது. பலத்த குண்டுக் காயம் அடைந்த டிரைவர் உடனடியாகப்பாதுகாப்புடன் பஸ்சை நிறுத்தினார்.
படுகாயத்துடன் துடித்துக் கொண்டிருந்த டிரைவர் உடனடியாக சேத்துப்பட்டில் உள்ள ஒரு தனியார்அருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட மர்ம மனிதனைப் பிடிக்க தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டது.
இவர்களுடைய தீவிர விசாரணையில் பஸ் மீது துப்பாக்கியால் சுட்டவன் ஒரு நரிக்குறவன் என்று தெரிய வந்தது.இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய பாளையம் சிங் (50) என்ற நரிக்குறவனைப் போலீசார் கைது செய்தனர்.
முயல் வேட்டைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போது பஸ்சின் விளக்கு வெளிச்சத்தால் கண் கூசியதாகவும்அதனால் சாலையோரம் இருந்த மணலில் சாய்ந்த போது தோள்பட்டையில் மாட்டப்பட்டிருந்த துப்பாக்கி தவறாகவெடித்து பஸ் டிரைவர் மீது பாய்ந்து விட்டதாகவும் போலீசாரிடம் பாளையம் சிங் கூறினான்.
பின்னர் அவன் போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை 15 நாள் காவலில் வைக்க நீதிபதிஉத்தரவிட்டார்.