நெல்லை அருகே வ.உ.சிக்கு ரூ.76 லட்சம் செலவில் மணிமண்டபம்
சென்னை:
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.76 லட்சம் செலவில் மணிமண்டபம் ஒன்றுதிருநெல்வேலி அருகே கட்டப்பட்டு வருகிறது.
"கப்பலோட்டிய தமிழன்" வ.உ. சிதம்பரம் பெயரில் மணிமண்டபம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று நீண்டகாலமாகவே வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் திருநெல்வேலி அருகே ரூ.76 லட்சம் செலவில் வ.உ.சி. மணிமண்டபத்தைத் தமிழக அரசு கட்டிவருகிறது.
இம்மாத இறுதியில் அங்கு செல்லும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த மணிமண்டபத்தைத் திறந்து வைக்கிறார்.
இதற்கிடையே பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக இம்மாத இறுதியில் தென் மாவட்டங்களானதிருநெல்வேலி, ராமநாதபுரம், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு ஜெயலலிதா செல்கிறார்.
இதையடுத்து அந்த மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பொடா சட்டத்தின் கீழ் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மதிமுக பிரமுகர்கள் இன்று கைது செய்யப்பட்டிருப்பதால்அடுத்து வரும் சில வாரங்களுக்கு அங்கு பெரும் பரபரப்பு நிலவும் என்பதால் அந்தச் சமயத்தில் வருகை தரும்ஜெயலலிதாவுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications