For Daily Alerts
Just In
கோவை அருகே வேன்-லாரி பயங்கர மோதல்: லாரி டிரைவர் பலி
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் அருகே இன்று காலை அரசு பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டதில்லாரி டிரைவர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று காலை கோயம்புத்தூரிலிருந்து திருப்பூர் நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
எதிர்த் திசையில் ஒரு லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது.
தென்னம்பாளையம் அருகே வந்து கொண்டிருந்த போது, லாரியும் பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் லாரியின் டிரைவர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் காயமடைந்த 26 பேர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Wednesday, July 10, 2002, 5:30 [IST]