மதுரை.. வேலூர்.. மீண்டும் மதுரை..மீண்டும் வேலூர்: போலீஸ் வேனில் அலைகழிக்கப்பட்ட வைகோ
மதுரை:
வைகோவை எந்தச் சிறையில் அடைப்பது என்பதில் போலீசார் பெரும் குழப்பம் செய்தனர்.
சென்னையில் இருந்து போலீசாருக்கு மாறி மாறி உத்தரவுகள் வந்ததால் மதுரை சிறையில் அடைத்த சிறிது நேரத்தில் அங்கிருந்து வேலூர்சிறைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், பாதி வழியில் மீண்டும் சென்னையில் இருந்து வேறு உத்தரவு வந்ததால் மீண்டும் மதுரை கொண்டு வந்தனர். பின்னர்அதிகாலையில் மீண்டும் அவரை வேலூர் சிறைக்குக் கொண்டு சென்றனர்.
நேற்று மாலையில் இருந்தே வைகோ மிக மோசமாக அலைகழிக்கப்பட்டார்.
நள்ளிரவு 2 மணிக்கு மதுரையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள திருமங்கலம் கொண்டு செல்லப்பட்ட வைகோ அங்கு நீதிபதி முன்ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து இரவு 3 மணியளவில் அவரை திருமங்கலத்தில் இருந்து மதுரை மத்திய சிறைக்குக் கொண்டு வந்தனர். மதுரை சிறைக்குள்கொண்டு சென்ற சிறிது நேரத்தில் சென்னையில் உயர் மடத்தில் இருந்து போலீசாருக்கு ஒரு உத்தரவு வந்தது. உடனே வைகோவை வேலூர்கொண்டு செல்லுமாறு உயர் மட்டத்தில் இருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து அதிகாலை 4 மணியளில் அவரை மீண்டும் போலீஸ் வேனில் ஏற்றிக் கொண்டு வேலூருக்குப் புறப்பட்டனர். ஆனால், 2 கி.மீ.தூரமே சென்ற நிலையில் மீண்டும் சென்னையில் இருந்து இன்னொரு உத்தரவு வந்தது. மீண்டும் அவரை மதுரை சிறைக்கே கொண்டுசெல்ல உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவரை மீண்டும் மதுரை சிறைக்குக் கொண்டு வந்தனர் போலீசார்.
அதிகாலையில் மதிமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வைகோ வரும் வேனைத் தடுக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டதால்அவரை மீண்டும் மதுரைக்குக் கொண்டு வந்ததாக போலீசார் கூறினர்.
பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் சென்னையில் உத்தரவு வந்தது. வைகோவை மீண்டும் வேலூர் கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டது.இதையடுத்து காலை 6 மணிக்கு மீண்டும் வைகோவை மதுரை சிறையில் இருந்து வெளியே அழைத்து வந்த போலீசார் வேலூர் கொண்டுசென்றனர்.












Click it and Unblock the Notifications