ஜெ. கொடும்பாவி எரிப்பு: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் நேற்று இரவும் பல மதிமுகவினர் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்த 6 மதிமுக தொண்டர்கள் கைதாயினர். வைகோ கைது செய்யப்பட்டுமதுரை கொண்டு வரப்பட்டதையடுத்து நேற்று அங்கு வரலாறு காணாத பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

தமிழகத்தின் தென் பகுதிகளில் வைகோவுக்கு ஆதரவு அதிகம் என்பதால் அவரை மதுரை சிறையில் இருந்து வேலூருக்கு மாற்றஉத்தரவிடப்பட்டதாக அக் கட்சியினர் தெரிவித்தனர். முதலில் திருச்சி கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டதாகவும் பின்னர் வேலூர் கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மதிமுகவினர் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தவும், தர்ணா போராட்டங்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் மிகபலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மதிமுகவினர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர் இதனால் அங்கு போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர். மதிமுகவினர் இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், மூத்த தலைவர்கள் மற்றும்மாவட்ட அளவிலான அனைத்து நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுவிட்டதால், இந்தத் தகவலை உறுதி செய்ய முடியவில்லை.

வைகோ கைதைத் தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. நிலைமை தொடர்ந்துகட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+