வைகோ கைதுக்கு கருணாநிதி, நெடுமாறன் கண்டனம்
சென்னை:
வைகோ கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி, தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, பொடா சட்டம் ஜெயலலிதா போன்றவர்கள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் தவறாகப்பயன்படுத்தப்படும் என்று ஏற்கனவே நான் எச்சரித்து இருந்தேன்.
இதை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்திலும், மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் மத்திய அமைச்சர் மாறன் எடுத்துச் சொன்னார்.
ஆனால், இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படாது என பிரதமரும், மற்றவர்களும் நம்பினார்கள். அந்த நம்பிக்கையை தகர்த்திருக்கிறார்ஜெயலலிதா.
பொடா சட்டத்தை ஆதரித்தது தவறு என திமுக கருதவில்லை. அதை ஆதரித்த வைகோவும் கருதவில்லை. ஆனால், எதிர்க் கட்சிகளைஒடுக்க இந்தச் சட்டத்தை ஜெயலலிதா பயன்படுத்தியுள்ளது தான் தவறு என்றார் கருணாநிதி.
பழ.நெடுமாறன்:
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டதற்கு தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.