வைகோ குடும்பம், நிருபர்களிடம் போலீசார் தொடர்ந்து கெடுபிடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையிலும் மதுரையிலும் வைகோவை சந்திக்க விடாமல் அவரது குடும்பத்தினரையும் பத்திரிக்கையாளர்களையும் போலீசார்தடுத்தனர்.

சென்னையில் நேற்று வைகோவைச் சந்திக்க வந்த அவரது மனைவி, மகன், சகோதரி ஆகியோரை முதலில் போலீசார் அனுமதிக்கவில்லை.அவர்களை காரை கிண்டி அருகிலேயே தடுத்து நிறுத்திய போலீசார் திருப்பி அனுப்பிவிட்டனர்.

எவ்வளவோ வாதாடியும் அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து வீட்டுக்குத் திரும்பிய அவர்கள் உயர் அதிகாரிகளுடன்தொடர்பு கொண்டு பேசினர். இதன் பின்னர் தான் அவர்கள் மீண்டும் விமான நிலையத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், விமான நிலையத்துக்குள் செல்ல வைகோவின் தாயாருக்கு அனுமதி தர போலீசார் மறுத்துவிட்டனர். இதனால் அவர் காரிலேயேஅமர்ந்திருந்தார்.

அதே போல நிருபர்களையும் போலீசார் வதைத்து எடுத்தனர். வைகோ வெளியே வந்தபோது அதைப் படம் எடுத்த தொலைக்காட்சியின்கேமராமேனை ஒரு போலீஸ்காரர் அடித்தார். இதனால் எரிச்சலடைந்த பத்திரிக்கையாளர்கள் அவரை விரட்டிச் சென்றனர். அவரைப்பிடித்து உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், அவர் தப்பியோடி விமான நிலையத்துக்குள் சென்று பதுங்கிக் கொண்டார். இதையடுத்து உயர் அதிகாரிகள் ஓடிவந்துபத்திரிக்கையாளர்களை சமாதானப்படுத்தினர்.

நிருபர்களிடம் வைகோ பேசிக் கொண்டிருந்தபோதே அவரைத் தள்ளிச் சென்று வேனில் ஏற்றினர். இதையடுத்து ஜெயலலிதாவின் பாசிஸஅரசு ஒழிக என்று கோஷம் போட்டார்.

இன்றும் தொல்லை...

இன்றும் போலீசார் தொல்லை மிக அதிகமாக இருந்தது. மதுரையில் இருந்து வேலூர் கொண்டு செல்லப்பட்ட வைகோவைச் சந்திக்கபத்திரிக்கையாளர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.

பத்திரிக்கையாளர்களை சந்திக்க விட வேண்டாம் என தங்களுக்கு சென்னையில் உயர் மட்டத்தில் இருந்து உத்தரவு வந்ததாக போலீசார்தெரிவித்தனர்,

முன்னதாக திருமங்கலம் நீதிபதியின் வீட்டையே போலீசார் கோட்டை மாதிரி காவல் காத்து நின்றனர். உள்ளே நுழையபத்திரிக்கையாளர்களை அனுமதிக்கவில்லை.

போட்டோ மட்டும் தான் எடுக்கலாம், பிரஸ் மீட்டுக்கு அனுமதிக்க மாட்டோம் என மதுரை போலீஸ் கமிஷ்னர் சூர்ய பிரசாத் கூறினார்.

வைகோவைச் சந்திக்க அவரது வழக்கறிஞர்களைக் கூட கமிஷ்னர் அனுமதிக்கவில்லை. இது எங்கள் உரிமை என வழக்கறிஞர்கள் உரத்தகுரலில் சத்தம் போட்ட பிறகு தான் கமிஷ்னர் அடங்கினார்.

வைகோ உயிரோடு தான் இருக்கிறாரா? அவர் உடல் நிலை எப்படி உள்ளது என்பதை அறிய எனக்கு உரிமை உண்டு. நேற்றிலிருந்துபோலீஸ் வேனில் வைத்து அவரை வதைத்துக் கொண்டுள்ளீர்கள் என்று வழக்கறிஞர் ஆசைத்தம்பி கமிஷ்னரை நோக்கி கத்திய பிறகு தான்சரி, யாராவது 2 வழக்கறிஞர்கள் மட்டும் வைகோவை சந்திக்கலாம் என்றார்.

சிகாக்கோவில் மும்பை வந்தவுடன் சென்னை வந்து, உடனே மதுரைக்கு வேனில் வந்து மீண்டும் அங்கிருந்து வேலூருக்குச் சென்றுகொண்டுள்ளார் வைகோ. அவரது உடல் நிலையை பற்றி கொஞ்சம் கூடக் கவலைப்படாமல் அவரை போலீசார் இழுத்தடிப்பதாகவழக்கறிஞர்களும் மதிமுகவினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

--> Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+