பெங்களூர்: மாணவர்கள் சேராததால் மூடப்படும் நிலையில் தமிழ் பள்ளி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூரில் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் சேருவது மிகவும் குறைந்து வருவதால் அந்தப் பள்ளிகள் மூடப்படும் நிலைஉருவாகியுள்ளது.
இதனால் தங்கள் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்குமாறு இந்தப் பள்ளி நிர்வாகங்கள் தமிழர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
பெங்களூர் காட்டன்பேட்டையில் உள்ள ஆர்.கே.எஸ். தமிழ் உயர் நிலைப் பள்ளியில் சேர மாணவர்கள் யாரும் முன் வரவில்லை.இதையடுத்து பள்ளியை மூடும் நிலை உருவாகியுள்ளதாக நிர்வாகம் கூறியுள்ளது.
இது குறித்து பள்ளியின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்ப் பள்ளி மூடப்பட்டுவிட்டால் மீண்டும் அதைத் தொடங்க கர்நாடக அரசு அனுமதிக்காது. மூடினால் மூடியது தான். இந்தப் பள்ளியைமூடிவிடாமல் பாதுகாக்க பெங்களூர் தமிழர்கள் முன் வர வேண்டும் என்று கோரியுள்ளது.












Click it and Unblock the Notifications