வைகோவுக்கு பேன் வழங்க கருணாநிதி கோரிக்கை
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு சிறையில் உடனடியாக மின் விசிறி வழங்கப்பட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதிகோரிக்கை விடுத்துள்ளார்.
வைகோ அடைக்கப்பட்டுள்ள அறையில் பேன் இல்லை. கொசுத் தொல்லையால் அவதிப்படும் அவர் கொசவர்த்தி கேட்டுள்ளார். ஆனால்,அதைத் தரவும் சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இந் நிலையில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிகாக்கோவில் வந்திறங்கியவுடன் மும்பை வழியாக சென்னை வந்த வைகோவை மதுரைக்கும் அங்கிருந்து வேலூருக்கும் வேனில்அழைத்துச் சென்று தொடர் பயணம் செய்ய வைத்து அலைகழித்துள்ளனர் போலீசார்.
பின்னர் சிறையில் அடைத்துவிட்டு பேன் கூட தராமல் கொடுமைப்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது. வைகோ ஒருநாடாளுமன்ற உறுப்பினர். அதை மதித்து அவரை நடத்த வேண்டும். உடனே அவருக்கு பேன் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications