For Daily Alerts
Just In
மதிமுக தொண்டர் தீக்குளித்து சாவு
திருச்சி:
வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மதிமுக தொண்டர் தீக்குளித்து இறந்தார்.
உடலில் 90 சதவீத தீக் காயங்களுடன் உயிருக்குப் போராடிய அவர் இன்று இறந்தார்.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் (வயது 34) நேற்றிரவு வீட்டில் தனது உடலில் மண்ண்ெணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
உடலெங்கும் தீப் பற்றி எரிந்த நிலையில் வைகோ வாழ்க என்று கோஷம் எழுப்பியபடி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார்.
இதையடுத்து அவர் மீது நீரை ஊற்றிய அண்டை வீட்டினர் அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், உடலில் 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இன்று காலை சிகிச்சை பலனன்றி அவர் இறந்தார்.
Comments
Story first published: Monday, July 15, 2002, 5:30 [IST]