வைகோ கைது எதிரொலி: பொடா சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு முடிவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டதற்கு தேசிய ஜனநாயக முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வைகோ கைது செய்யப்பட்ட பிறகு தே.ஜ. கூட்டணியின் முதல் கூட்டம் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நேற்று நடந்தது.
இக் கூட்டத்தில் பேசிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் தமிழக அரசால் இந்தச் சட்டம் மிகத் தவறாகப்பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினர்.
தீவிரவாதிகளை ஒடுக்க கொண்டு வந்த ஒரு சட்டத்தை தமிழக அரசு மிகத் தவறாக பயன்படுத்தி வைகோவைக் கைது செய்திருப்பதாக இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் அதில் திருத்தங்கள் கொண்டு வர முடிவுசெய்யப்பட்டது.
இத்தகவலை தே.ஜ. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications