பிளஸ் டூ உடனடி மறு தேர்வு முடிவுகள் அறிவிப்பு: 50 சதவீதம் தேர்ச்சி
சென்னை:
இந்த பிளஸ் டூ தேர்வில் ஒன்று, இரண்டு பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு நடத்தப்பட்ட உடனடி மறுதேர்வில் 50 சதவீதம்பேர் தேர்ச்சியடைந்துள்ளது.
ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் ஓராண்டை வீணாக்குவதைத் தடுக்க உடனடியாக மறு தேர்வுநடத்தும் திட்டம் தமிழக அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கல்வியமைச்சர் தம்பிதுரையின் யோசனையில் உருவானஇந்தத் திட்டத்துக்கு சுமாராகப் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களும் மாணவர்களும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இத் திட்டத்தின்படி கடந்த மாதம் 26ம் தேதியும் 27ம் தேதியும் உடனடி மறு தேர்வுகள் நடந்தன. இந்தத் தேர்வு முடிவுகள் நேற்றுவெளியிடப்பட்டன. இதில் 50 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதன்மூலம் இவர்கள் இந்த ஆண்டே கல்லூரிகளில் சேர்ந்துபடிப்பைத் தொடர்ந்துவிட முடியும.
இந்த மாணவர்களுக்கு வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படும் தமிழகதேர்வுத்துறை இயக்குநர் பழனிவேலு கூறினார். அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் டூ பொதுத் தேர்வுகளில் ஓரிரு பாடங்களில் தோல்வியடைந்தமாணவ-மாணவிகள் அவற்றில் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டிலேயே தங்களுடைய மேற்படிப்பைத் தொடருவதற்குவசதியாகத் தான் இந்த உடனடி மறு தேர்வு நடத்தப்பட்டது.
இந்த உடனடி மறு தேர்வை 42,793 மாணவ-மாணவிக எழுதினார்கள்.
இவர்களில் 26,179 பேர் ஒரு பாடம் மட்டும் எழுதினார்கள். இவர்களில் 15,561 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருபாடங்களை எழுதிய 16,614 மாணவ-மாணவிகளில் 6,001 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் 50.39மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஹால் டிக்கெட் பெற்ற மையங்களில் மாணவ-மாணவிகள் தங்களுடைய தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். இதைத் தவிர பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்ட வெப்சைட்டுகள் மூலமாகவும்முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த உடனடி மறு தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவ-மாணவிகளுக்கு வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில்மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படவுள்ளன. ஹால் டிக்கெட் பெற்ற மையங்களிலேயே இந்த மதிப்பெண்பட்டியல்களை மாணவ-மாணவிகள் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த உடனடி மறு தேர்வு விடைத்தாள்களின் நகலைப் பெறுவதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.20ம் ஒவ்வொருபாடத்துக்கும் கட்டணமாக ரூ.55ம் செலுத்த வேண்டும்.
அதே போல் மறு கூட்டல் செய்ய விரும்பும் மாணவ-மாணவிகள் ஒரு பாடத்திற்கு ரூ.130ம் இரு பாடங்களுக்குரூ.205ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பங்களைப் பதிவு அஞ்சல் மூலமாக இணை இயக்குனர் (மேல்நிலை), அரசுத் தேர்வுகள் இயக்ககம்,கல்லூரி சாலை, சென்னை 600 006 என்ற முகவரிக்கு வரும் 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
உடனடி மறு தேர்வில் தோல்வியடைந்தவர்கள் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் தனித் தேர்வுக்குவிண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார் பழனிவேலு.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications