இன்னொரு மதிமுக தொண்டர் தற்கொலை முயற்சி
கடலூர்:
வைகோ கைதைக் கண்டித்து கடலூரில் இன்னொரு மதிமுக தொண்டர் தற்கொலை செய்ய முயன்றார். இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார்.
நேற்று முன் தினம் தான் திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் (வயது 34) தனது உடலில் மண்ண்ெணெய் ஊற்றி தீ வைத்துதற்கொலை செய்து கொண்டார்.
இந் நிலையில் கடலூர் அருகே உள்ள நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த மும்மூர்த்தி (வயது 39) காட்டு மன்னார்கோவில் பஸ் நிலையம்அருகே நடுரோடில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முயன்றார்.
ஆனால், அந்தப் பகுதியில் ரோந்து சென்ற போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மதிமுக வழக்கு:
இதற்கிடையே பொடா வழக்கின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து உச்ச நீதிமன்றம் அல்லது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் கூறினார்.
அதே நேரத்தில் வைகோ உள்ளிட்ட 9 பேரும் ஜாமீன் கோர மாட்டார்கள் என்றார். இந்தக் கைதையே எதிர்த்துத் தான் வழக்குப்போடப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications