சென்னையில் தொடர் கொள்ளைகளை தடுக்க ரோந்து செல்லும் "வீர இளைஞர்கள்"

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் நடந்து வரும் தொடர் கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக தற்போது அந்த அந்தப்பகுதிகளைச் சேர்ந்த சில இளைஞர்களே இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாட்டசாட்டமாகக் காட்சியளிக்கும் இந்த இளைஞர்களுக்கு சென்னை போலீசாரே பயிற்சி அளித்துள்ளனர்.

கடந்த ஐந்து மாதங்களாகவே சென்னையில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இரவுநேரங்களில் வீடுகளின் கதவு அல்லது ஜன்னலை உடைத்து பணம் நகைகள் கொள்ளையடிக்கப்படுவது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது.

இரவு நேரங்களில் போலீசார் ரோந்து சென்று கொண்டிருக்கும் போதிலும் எப்படியாவது இந்தக் கொள்ளைச்சம்பவங்கள் நடந்து விடுகின்றன.

இதையடுத்து அந்த அந்தப் பகுதிகளைச் சேர்ந்த சில இளைஞர்களே இரவு ரோந்துப் பணியில் ஈடுபடலாம் என்றுமுடிவு செய்யப்பட்டது.

அந்தப் பகுதிகளைச் சேர்ந்த சில குற்றவாளிகளை இந்த இளைஞர்கள் தெரிந்து வைத்திருப்பதால் கொள்ளைச்சம்பவங்களை எளிதில் தவிர்த்து விடலாம் என்று போலீசாரும் நம்பினர்.

இதையடுத்து முதற்கட்ட நடவடிக்கையாக சென்னை-பூக்கடை பகுதியில் 20க்கும் மேற்பட்ட வாட்டசாட்டமானஇளைஞர்களைப் போலீசார் தேர்ந்தெடுத்தனர்.

கடந்த சில நாட்களாக அந்த இளைஞர்களுக்குப் போலீசார் தீவிரமான பயிற்சிகளை அளித்தனர். அதன் பிறகுசமீபத்தில் அந்த இளைஞர்கள் பூக்கடை பகுதியில் இரவு முழுவதும் வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து ரோந்துசெல்லும் பணியைத் துவங்கினர்.

இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை இந்த வீர இளைஞர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர்.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் சீருடையும் மாதம் ரூ.1,500 சம்பளமும் அளிக்கப்படுகின்றன. இதற்கான செலவைசில நலச் சங்கங்கள் ஏற்றுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+