For Daily Alerts
Just In
ஆகஸ்டு 3ல் குற்றால சாரல் விழா துவக்கம்
திருநெல்வேலி:
குற்றாலத்தில் வரும் ஆகஸ்டு 3ம் தேதி சாரல் விழா தொடங்குகிறது.
இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்பே கடந்த மாதம் குற்றாலத்தில் குளுகுளு சீசன் தொடங்கியது. அனைத்துஅருவிகளிலும் தொடர்ந்து அதிகமாக நீர் விழுந்து கொண்டிருக்கிறது.
இதையடுத்து குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில் ஆண்டு தோறும் சீசனையொட்டி கொண்டாடப்படும் குற்றாலச் சாரல் விழா வரும் 3ம் தேதிதொடங்குகிறது.
சபாநாயகர் காளிமுத்து இந்த சாரல் விழாவைத் தொடங்கி வைக்கிறார். இந்த விழா தொடர்பான கலாச்சாரநிகழ்ச்சிகளை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கருப்பசாமி தொடங்கி வைக்கிறார்.
ஆகஸ்டு 10ம் தேதி வரை இந்தக் குற்றாலச் சாரல் விழா நடக்கும் என்று திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுனில்பாரிவால் தெரிவித்தார்.
Comments
Story first published: Friday, July 19, 2002, 5:30 [IST]