ஒட்டன்சத்திரத்தில் போலீஸ் நிலையத்திலிருந்து ஜட்டியுடன் தப்பியோடிய கைதி
ஒட்டன்சத்திரம்:
விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட ஒரு கைதி ஜட்டி மட்டுமே போட்டிருந்த நிலையில்அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முருகன் (28) என்பவனை சமீபத்தில் ஒட்டன்சத்திரம் போலீசார் கைதுசெய்தனர்.
தொடர்ந்து மூன்று நாட்களாக அவனைப் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் அவனிடம் விசாரணை நடத்திவந்தனர்.
வழக்கமாக விசாரிக்கும் பாணியில் முருகனை ஜட்டி மட்டும் போட்ட நிலையிலேயே போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை சுமார் 4.30 மணியளவில் திடீரென்று போலீஸ் நிலையத்திலிருந்து முருகன்தப்பினான்.
ஜட்டி மட்டுமே போட்டிருந்த நிலையில் தப்பி ஓடிய முருகன், போலீஸ் நிலையத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த ஒரு பைக்கை எடுத்துக் கொண்டு அதில் ஏறி மறைந்தான்.
முருகன் ஏற்கனவே பலமுறை கைதாகி சிறைத் தண்டனை பெற்றுள்ளான். போலீசார் அவனைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications