சுதந்திர தினத்தை சீர்குலைக்க 25 மனித வெடிகுண்டுகள் ஊடுருவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டெல்லி உள்பட இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்த ஏமன் நாட்டு தீவிராதி தலைமையில் 25 மனித வெடிகுண்டுகள் நாட்டுக்குள்நுழைந்திருப்பதாக மத்திய உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து அனைத்து மாநில அரசுகளும் முக்கிய இடங்களுக்குபாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 15ம் தேதி நடக்கவுள்ள நமது சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் நாச வேலைளில் ஈடுபட தீவரவாதிகள்தயாராகி வருகின்றனர் என மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. கூறியுள்ளது.

வெறும் வெடிகுண்டுத் தாக்குதல்களாக இல்லாமல் மனித வெடிகுண்டுகள் மூலம் அசம்பாவித செயல்கள் நடத்தப்படலாம் என்றுதெரியவந்துள்ளது. இதையடுத்து அனைத்து மாநில காவல்துறைகளுடனும் ஐ.பி. ஆலோசனை நடத்தி வருகிறது. காவல்துறைகளுடன்இணைந்து நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஐ.பி. இறங்கியுள்ளது.

இந்தத் தாக்குதல்களுக்கு ஏமன் நாட்டைச் சேர்ந்த பத்ருதீன் என்பவன் தலைமை வகிக்கப் போவதாகத் தெரியவந்துள்ளது. இவனதுதலைமையில் 25 மனித வெடிகுண்டுகள் காஷ்மீருக்குள் ஊடுருவி விட்டதாகவும், அவர்கள் சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் திட்டத்துடன்நாடு முழுவதும் பரவ உள்ளதாகவும் தெரிகிறது.

இதையடுத்து ஜம்மூவில் இருந்து வரும் அனைத்து ரயில்கள், பஸ்கள், லாரிகள், கார்கள் அனைத்தும் சோதனைக்குள்ளாக்கப்பட்டுவருகின்றன. காஷ்மீரில் நடத்தப்படும் தாக்குதல்களால் பாகிஸ்தானுக்கு உலக அளவில் கெட்ட பெயர் ஏற்பட்டு வருவதால் இம் முறைகாஷ்மீரில் எந்தத் தாக்குதலையும் நடத்த வேண்டாம் என இந்தக் கும்பலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

முழுக்க முழுக்க காஷ்மீருக்கு வெளியே இந்தியாவின் பிற பகுதிகளில் தான் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட உள்ளன என்ற அதிர்ச்சிசெய்தியையும் அனைத்து மாநில காவல்துறைகளும் உள்துறைச் செயலாளர்களுக்கும் மத்திய புலனாய்வுப் பிரிவு அனுப்பி வைத்துள்ளது.

வி.ஐ.பிக்களைக் கொல்ல முயற்சி நடக்கலாம் என்பதால் அனைத்து முக்கியஸ்தர்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்துமாறுஉத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மக்கள் கூடும் பஸ் நிலையங்கள், முக்கியகட்டடங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட உள்ளது.

குறிப்பாக உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம், பெங்களூர், சென்னை, மும்பை, குஜராத்தின் சில பகுதிகள் குறி வைக்கப்படலாம் என்று தெரிகிறது.நாட்டின் வட-கிழக்குப் பகுதிக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் தீவிர சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தீவிரவாதிகளுடன் சேர்ந்து தமிழக போலீஸ் தப்பவிட்ட இமாம் அலியும் ஏதாவது நாச வேலையில் ஈடுபடவும் வாய்ப்புள்ளதால்தமிழகம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது.

சாதாரண உடையில் ஆயிரக்கணக்கான மத்திய உளவுப் பிரிவினரும் மாநில போலீசாரும் முக்கிய இடங்களை கண்காணிக்கஆரம்பித்துவிட்டனர். சுதந்திர தினத்துக்கு முன்னதாகவே இந்தத் தாக்குதல்கள் நடக்கலாம் என்று ஐ.பி. கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+