முதல்வர்களை மத்திய அரசு அலட்சியப்படுத்தக் கூடாது: கருணாநிதி
சென்னை:
குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றவர்களின் பதவியேற்பு நிகழ்ச்சிகளில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கவேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அதே நேரத்தில் நான் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகப் பேசுவதாகக் கருதக் கூடாதுஎன்றும் கூறினார்.
டாக்டர் கலாமின் பதவியேற்பு விழாவுக்கு தன்னே அழைக்காததற்கு மத்திய அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர்ஜெயலலிதா. ஆனால், விழாவில் கலந்து ஜெயலலிதாவிடம் இருந்து முறையான கோரிக்கை வராததால் தான் அவரை அழைக்கவில்லைஎன மத்திய அரசு கூறியுள்ளது.
இந் நிலையில் சென்னையில் நிருபர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி,
சுதந்திர பெற்ற காலத்தில் இருந்தே மாநில முதல்வர்களை இது போன்ற நிகழ்ச்சிளுக்கு அழைப்பதில்லை என்ற மரபு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இதை நிரந்தரமாக்கிவிடக் கூடாது.
விண்ணப்பம் அனுப்பும் முதல்வர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பிவிட்டு பிற முதல்வர்களை புறக்கணிக்கும் போக்கை மத்திய அரசுஉடனே நிறுத்த வேண்டும்.
அழைப்பிதழ் என்பது விரும்பி அனுப்பப்படும் ஒன்று. கேட்டுப் பெரும் விஷயம் அல்ல. இனிமேலாவது முக்கிய நிகழ்ச்சிகளில் மாநிலமுதல்வர்களுக்கும் அழைப்பு அனுப்பி மதிக்கும் பழக்கத்தை மத்திய அரசு கடைபிடிக்க வேண்டும்.
மாநில அரசுகளின் உரிமைகளை எந்த வகையிலும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பது தான் என்னுடைய நிலை. குடியரசு தினத்தன்றுமுதல்வர்கள் தேசியக் கொடியேற்ற அனுமதி தர வேண்டும் என்று போராடி அந்த உரிமையைப் பெற்றுத் தந்தவன் நான் என்பதை இங்குநினைவூட்ட விரும்புகிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications