இந்தியா- பாக் பதற்றம்: பாவல் இன்று டெல்லி வருகை
டெல்லி:
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தைத் தணிப்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் இன்று இந்தியாவருகிறார்.
இன்று அவர் டெல்லி வருகிறார். இந்தியா- பாகிஸ்தானுக்குப் புறப்படும் முன் அமெரிக்காவில் நிருபர்களிடம் பேசிய பாவல், எல்லைக்குஅப்பால் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவது மீண்டும் அதிகரித்துவிட்டது என்று கூறியிருந்தார்.
இன்று டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுடன் அவர் பேச்சு நடத்துகிறார். துணை ஜனாதிபதியின்மறைவையடுத்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. ஆனால், இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுஎன்பதால் பாவலின் வருகையை மத்திய அரசு தடுக்கவில்லை. அதே நேரத்தில் பாவலுக்கு சின்ஹா அளிக்க இருந்த இரவு விருந்து நிகழ்ச்சிரத்து செய்யப்பட்டுவிட்டது.
பின்னர் பாவல் பிரதமர் வாஜ்பாயையும் சந்தித்துப் பேசுகிறார்.