அரியலூரில் தமிழர் விடுதலை இயக்க தீவிரவாதி கைது: வெடிகுண்டுகள் பறிமுதல்
அரியலூர்:
அரியலூர் அருகே வெடிகுண்டுகளுடன் சென்று கொண்டிருந்த தமிழர் விடுதலை இயக்கத் தீவிரவாதி ஒருவனைப்போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் உடையாளர்பாளையம் தாலுகா இளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ரவி (27) என்பவர்தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்.
இந்த இயக்கத்திற்கு தற்கொலைப் படை அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று ஆதரவுதிரட்டி வந்தார். ஆனால் போலீசாரிடம் பிடி கொடுக்காமல் தப்பித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் அரியலூர் அருகே விளாங்குடி ஆற்றுப் பாலம் அருகே ரவி சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதுஅவரைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையின் போது ரவியின் பையில் 4 நாட்டு வெடிகுண்டுகள், 15 ஜெலட்டின்குச்சிகள், 15 டெட்டனேட்டர்கள், வெடிமருந்துப் பொருள்கள், மின்சார வயர்கள் மற்றும் வீச்சரிவாள் ஆகியவைஇருப்பது தெரிய வந்தது.
அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார், ரவியைக் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரவியை 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிபதிஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications