எமிரேட்ஸ் நிறுவனங்களில் பாதிப் பேர் இந்தியர்களே!
துபாய்:
ஐக்கிய அரபு நாடுகளில் பணி புரிபவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் தான் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவித்தது.
அந்நாட்டின் சமூக மற்றும் தொழிலாளர்கள் துறை அமைச்சகம் இந்தப் புள்ளி விவரம் எடுக்கும் பணியைமேற்கொண்டது.மொத்தமுள்ள பணியாளர்களில் 87 சதவீதம் பேர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறிய அந்தப் புள்ளிவிவரம் 10.6 சதவீத பணியாளர்கள் மட்டுமே அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தது.
மீதமுள்ளவர்கள் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளைச்சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாட்டினருக்குத் தான் (குறிப்பாகஇந்தியர்களுக்கு) அதிக வேலை வாய்ப்புக்களை அளித்து வருகின்றன. தனியார் நிறுவனங்களின் வேலை வாயப்புவிஷயங்களில் அந்நாட்டு அரசும் அதிகமாகத் தலையிடுவதில்லை.
இப்படியே போனால் வரும் 2015ம் ஆண்டுக்குள் இங்கு பணிபுரியும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை நான்குமடங்காக அதிகரித்து விடும் என்றும் அந்தப் புள்ளி விவரம் அந்நாட்டு அரசாங்கத்தை மிரட்ட்யுள்ளது.
இதனால் தனியார் நிறுவனங்களில் வெளிநாட்டினருக்காக அளிக்கப்படும் வேலைவாய்ப்பைக் கட்டுப்படுத்திஉள்ளூர்வாசிகளுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றும் அரசாங்கத்துக்கு தொழிலாளர் துறைஅறிவுறுத்தியுள்ளது.
கடந்த 1995ம் ஆண்டில் 12 லட்சம் வெளிநாட்டினர் இங்கு வேலை பார்த்து வந்தனர். வரும் 2015ல் இந்தஎண்ணிக்கை 48 லட்சமாக அதிகரிக்கும் என்று அந்தப் புள்ளி விவரம் கணக்கிட்டுள்ளது.
"அபுதாபி சேம்பர்" என்ற அமைப்பின் மாதப் பத்திரிக்கையான "இக்டிசாத்"தில் இந்தப் புள்ளி விவரங்கள்தெரிவிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications