பாகிஸ்தானில் பதுங்கியிருக்கிறான் லேடன்: இந்தியா
லண்டன்:
சர்வதேசத் தீவிரவாதியான ஒசாமா பின் லேடன் இன்னும் சாகவில்லை என்றும் அவன் பாகிஸ்தானில் தான் ஒளிந்துகொண்டுள்ளான் என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.
உளவுத்துறை மூலமாக மூன்று மாதங்களுக்கு முன் தனக்கு இந்தத் தகவல் கிடைத்ததாக லண்டனில் உள்ள "சேனல் 4நியூஸ்" என்ற தொலைக்காட்சி நிறுவனத்துக்குப் பேட்டியளிக்கும் போது பெர்னாண்டஸ் இந்தப் பரபரப்புத்தகவலைக் கூறினார்.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறையின் முழுப் பாதுகாப்புடன் பின்லேடன் அந் நாட்டில் ஒளிந்துகொண்டிருப்பதாகவும் பெர்னாண்டஸ் தெரிவித்தார்.
பின் லேடன் பற்றிய விவரங்கள் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப்பிடம்தெரிவிக்கப்பட்ட போதிலும் சில சமயங்களில் அவனைப் பற்றிய விவரங்களை அந்நாட்டு உளவுத்துறைமுஷாரப்பிடம் கூறுவதில்லை என்றும் பெர்னாண்டஸ் கூறினார்.
இந்த விவரங்களை அமெரிக்காவிடம் இந்தியா தெரிவித்துள்ளதாகவும் பெர்னாண்டஸ் தெரிவித்தார்.
ஆனால் பாகிஸ்தான் இந்தத் தகவலைக் கடுமையாக மறுத்துள்ளது. பாகிஸ்தானை அவமானப்படுத்த வேண்டும்என்பதற்காகவே பெர்னாண்டஸ் இவ்வாறு கூறியுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்ரஷித் குரேஷி கூறினார்.
பாகிஸ்தானில் பின் லேடன் இருப்பதாகத் தெரிய வந்தால் அமெரிக்காவுக்குத் தான் முதலில் தகவல் போகும்.நாங்கள் மறைக்க மாட்டோம் என்றும் குரேஷி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications