ஆகஸ்டு 9ல் காவிரி கண்காணிப்புக் குழு கூடுகிறது: தமிழகம் பங்கேற்பு
டெல்லி:
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கேற்ப வரும் 9ம் தேதி காவிரி கண்காணிப்புக் குழு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில்தமிழகமும் பங்கேற்கிறது.
ஆகஸ்டு 12ம் தேதிக்குள் இந்தக் கண்காணிப்புக் குழு கூட வேண்டும் என்றும் அதன் பிறகு ஒரு வாரத்திற்குள்தமிழக மற்றும் கர்நாடக அணைகளில் நீர் இருப்பை ஆய்வு செய்து பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரிஆணையத்திடம் இந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 29ம் தேதிஉத்தரவிட்டது.
அதன்படி வரும் 9ம் தேதி காவிரி கண்காணிப்புக் குழு டெல்லியில் கூடுகிறது. தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும்பாண்டிச்சேரி மாநில தலைமைச் செயலர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் காவிரி ஆணையமும் கண்காணிப்புக் குழுவும் செயலற்றுப் போய்விட்டதால் அவை நடத்தும்கூட்டங்களில் இனி தமிழகம் பங்கேற்கப் போவதில்லை என்று கடந்த மாதம் 10ம் தேதி தமிழக முதல்வர்ஜெயலலிதா கூறியிருந்தார்.
இந்நிலையில் ஜூலை 29ம் தேதி உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி கண்காணிப்புக் குழுவின்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வரும் 9ம் தேதி நடக்கவுள்ள கண்காணிப்புக் குழுக்கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளரான சுகவனேஸ்வர் கலந்து கொள்வார் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வரும் 16ம் தேதிக்குள் காவிரி கண்காணிப்புக் குழு தமிழக மற்றும் கர்நாடக அணைகளின் நீர் இருப்பைஆய்வு செய்து அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகு நடக்கும் காவிரி ஆணையக் கூட்டத்திலும் ஜெயலலிதா கலந்துகொள்வார் என்று தமிழக அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
தமிழக அமைச்சரவை கூட்டம் ஒத்திவைப்பு:
இதற்கிடையே இது தொடர்பாக இறுதி முடிவெடுப்பதற்காக இன்று கூடவிருந்த தமிழக அமைச்சரவை கடைசிநேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
காவிரி ஆணையக் கூட்டத்திலும் கண்காணிப்புக் குழு கூட்டத்திலும் தமிழகம் கலந்து கொள்வது குறித்துஆலோசனை செய்வதற்காக தமிழக அமைச்சரவை இன்று பகல் 12.15 மணிக்கு சென்னையில் கூடும் என்றுஅறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த அமைச்சரவைக் கூட்டம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. அமைச்சரவை மீண்டும் கூடும்தேதி குறித்து அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications