சிவகாசி தொழிற்சாலை தீ விபத்தில் 4 பேர் பலி
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீப்பெட்டித் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 2 பெண்கள்உள்பட 4 பேர் பலியாயினர். 14க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 8 பேரின் நிலைமை மிக மோசமாக உள்ளது.
சிவகாசியில் பஸ் நிலையம் அருகே இந்த தீப்பெட்டித் தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இங்கு நேற்று மாலைதிடீரென்று தீப்பிடித்துக் கொண்டது. இதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கார்த்திகேயன் என்பவர் சம்பவஇடத்திலேயே இறந்தார்.
கோமதி, பொன்மணி, ராஜா ஆகியோர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல்இறந்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால், காவல்துறை எஸ்.பி. மகேஷ்வர் தயாள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள்சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த தீப்பெட்டித் தொழிற்சாலையின் லைசென்ஸ் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்துவிசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications