அதிமுகவினர் கலவர பயம்: கஞ்சி அருந்தும் திட்டத்தை ரத்து செய்தார் கருணாநிதி
சென்னை:
திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பத்தில் இன்று நெசவாளர்களுடன் சேர்ந்து கஞ்சி அருந்தவிருந்த தனது திட்டத்தை கருணாநிதி ரத்து செய்தார்.
கருணாநிதிக்குப் போட்டியாக அதே இடத்தில் அதிமுகவினரும் இன்று அங்கு நெசவாளர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். இந் நிலையில் தான் அங்கு சென்றால் அதிமுகவினர் கலவரத்தைத் தூண்டிவிட்டு உயிர் பலிகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் தனது திட்டத்தை ரத்து செய்வதாக கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று இரவு நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
பசி பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் ஏழை கைத்தறி நெசவாளர்களுக்கு கஞ்சி வழங்கும் பணியை திமுக மேற்கொண்டுள்ளது.
இதையொட்டி திருத்தணிக்கு அருகில் உள்ள அம்மையார் குப்பத்தில் உள்ள நெசவாளர்களுக்கு இன்று கஞ்சி வழங்கி நானும் கஞ்சி அருந்துவதாக இருந்தேன்.
ஆனால் அதிமுக அரசு உடனடியாக அந்தப் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தேங்கிக் கிடக்கும் கைத்தறித் துணிகளைக் கொள்முதல் செய்ய ரூ.1 கோடி ஒதுக்கியுள்ளது.
மேலும் இன்றே அந்த ஊரில் அமைச்சர்களைக் கொண்டு நெசவாளர்களுக்கு உணவு வழங்கப் போவதாகவும் அறிவித்து அதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.
அம்மையார் குப்பத்தில் அமளியை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே போட்டா போட்டியாக அதிமுக அரசு முனைந்திருப்பதால், அதைத் தவிர்த்து அவ்வூர் நெசவாளர்களின் அமைதிக்குக் குந்தகம் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக நான் இந்தக் கஞ்சி வழங்கும் திட்டத்தை ரத்து செய்துள்ளேன் என்றார் கருணாநிதி.
இந்தப் பிரச்சனை குறித்து ஆளுநர் ராமமோகன் ராவிடம் பேசினீர்களா என்று ஒரு நிருபர் கேட்டார்.
"ஆளுங்கட்சியினரே சட்டம்-ஒழுங்கைக் குலைக்கும் விதமாக மோதலை உருவாக்க முனைகிறார்கள் என்பதை ஆளுநரிடம் தெரிவிக்குமாறு அவருடைய செயலாளரிடம் கூறினேன். சிறிது நேரத்திலேயே எங்களைத் தொடர்பு கொண்ட அந்தச் செயலாளர், இது அரசியல் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் ஆளுநர் என்ன செய்ய முடியும் என்று கூறினார்" என்று கருணாநிதி பதிலளித்தார்.
கஞ்சித் தொட்டி வைப்பதால் நெசவாளர்களின் பிரச்சனை தீர்ந்து விடுமா என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, நிரந்தரத் தீர்வு காண முடியாமல் போனாலும் அவ்வப்போது ஏற்படும் பசிக்குத் தீர்வு காண முடியும் அல்லவா என்று கூறிய கருணாநிதி, அரசியல் அறிவாளி என்று புகழப்பட்ட ராஜாஜியின் ஆட்சிக் காலத்திலேயே கஞ்சித் தொட்டி வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications