சென்னை வீட்டில் ரெய்ட் முடிந்தது: ஆதாரங்கள் கிடைக்கவில்லை
சென்னை:
வைகோவின் சென்னை அண்ணாநகர் வீட்டில் சோதனை நடத்திய கியூ பிராஞ்ச் போலீசார் அங்கிருந்து 2 புத்தகங்கள், ஒருசி.டியை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.ஞணூ>
அவருக்கும் புலிகளுக்கும் இடையிலான உறவை நிரூபிப்பதற்காக ஆவணங்களைத் தேடுவதற்காக இந்த ரெய்ட்நடத்தப்பட்டதாக போலீசார் கூறினர்.
ஆனால். அவர்களுக்கு கேசட்டுகள் தவிர வேறு எந்த ஆதாரமும் கிடைத்ததாகத் தெரியவில்லை. அண்ணா நகர் வீட்டில் காலைசுமார் 8 மணியளவில் ஆரம்பித்த ரெய்ட் பகல் 2 மணிக்கு முடிவடைந்தது.
அதன் பின்னர் போலீசார் வெளியே வந்தனர். நிருபர்களிடம் பேச அவர்கள் மறுத்துவிட்டனர்.
ஆனால், வைகோ வீட்டில் இருந்து 2 புத்தகங்கள், ஒரு சி.டி. ஆகியவை மட்டுமே கைப்பற்றப்பட்டன. வேறு எதுவும்போலீசாருக்குக் கிடைக்கவில்லை.
இது குறித்து வைகோவின் உதவியாளர் அருணகிரி கூறுகையில், இந்த சி.டியில் ஜெனீவாவில் நடந்த மனித உரிமைகள்மாநாட்டில் வைகோ பேசிய பேச்சுக்கள் அடங்கியுள்ளன. இது தவிர 2 புத்தகங்களை எடுத்துச் சென்றனர். தாங்கள் எடுத்துச்சென்ற எல்லா பொருள்களுக்கும் போலீசார் ரசீது தந்துவிட்டனர். சோதனை நடத்த வைகோவின் குடும்பத்தினர் போலீசாருக்குமுழு ஒத்துழைப்புத் தந்தனர் என்றார்.