வைகோவின் டெல்லி வீட்டின் வெளியே நின்றிருந்த போலீஸ்
டெல்லி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சென்னை வீட்டில் இன்று காலை க்யூ பிராஞ்ச் போலீசார் சோதனையைத்தொடங்கிய அதே நேரத்தில் டெல்லியில் உள்ள அவருடைய வீட்டிற்கும் தமிழக போலீசார் வந்து சேர்ந்தனர்.
டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள வைகோவின் அரசு இல்லத்துக்கு இன்று காலை இந்தப் படை வந்தது.
ஆனால், பிற்பகல் வரை வீட்டு வளாகத்தில் தான் நின்று கொண்டிருந்தது இந்தப்படை. வீட்டுக்குள் நுழையவில்லை.டெல்லி வீட்டை சோதனையிட மத்திய அரசின் அனுமதி வேண்டும் என்று தெரிகிறது. இதற்காக அந்தப் படைகாத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் சோதனை நடத்த க்யூ பிராஞ்ச் தனிப்படை போலீசார் நேற்றிரவே விமானம் மூலம் சென்னையிலிருந்துடெல்லி வந்துவிட்டனர்.
விடுதலைப்புலிகளுடன் வைகோவுக்கு தொடர்பு உள்ளதாகக் கூறி அது தொடர்பான ஆவணங்களைத் திரட்டஇந்தப் படை டெல்லி வந்துள்ளது.
ஆனால், மாலை வரை இந்த இல்லத்தில் சோதனை நடந்ததா இல்லையா என்று தெரியவில்லை.