For Daily Alerts
Just In
ஈரோட்டில் ஒன்றும் கிடைக்காமல் திரும்பிய போலீசார்
ஈரோடு:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் எம்.பியும் ஈரோடு மாவட்ட செயலாளருமானகணேசமூர்த்தியின் வீட்டில் இன்று சோதனை நடத்திய போலீசார் அங்கு ஆவணங்கள் ஏதும் கிடைக்காமல்வெளியேறினர்.
இன்று காலை 8 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட டி.எஸ்.பி. ஜான் செல்லையா தலைமையில் ஈரோடு சென்ற க்யூபிராஞ்ச் போலீசார் பெரியார் நகரில் உள்ள கணேசமூர்த்தியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
கணேசமூர்த்தியின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் அப்போது அங்கு இருந்தனர்.
சுமார் 9.45 மணி வரை போலீசார் அங்கு சோதனை நடத்தினர்.
பின்னர் ஆவணங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் வெளியே வந்த க்யூ பிராஞ்ச் போலீசார், நாங்கள் தேடி எந்தஆவணமும் கிடைக்கவில்லை என்று கணேசமூர்த்தியின் வக்கீலிடம் எழுதிக் கொடுத்து விட்டுச் சென்று விட்டனர்.
Comments
Story first published: Friday, May 24, 2002, 5:30 [IST]