மதுரை கட்சி அலுவலகத்தில் பிரபாகரன் படம் பறிமுதல்
மதுரை:
வைகோவுடன் சேர்த்து பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை, திருச்சி மற்றும் சேலம் சிறைகளில்வைக்கப்பட்டுள்ள மதிமுக பிரமுகர்களின் வீடுகளிலும் இன்று காலை க்யூ பிராஞ்ச் போலீசார் சோதனையைஆரம்பித்துள்ளனர்.
மதிமுகவின் ஈரோடு மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏவான பி.எஸ். மணியம், மதுரைமாவட்டச் செயலாளர் வீர இளவரசன், சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன், வழக்கறிஞர்பிரிவுச் செயலாளர் அழகுசுந்தரம்,
மதுரை மாநகரச் செயலாளர் பூமிநாதன், மதுரை மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கணேசன் மற்றும் மதுரைமாவட்ட இலக்கிய அணித் தலைவர் நாகராஜன் ஆகிய எட்டு பேரின் வீடுகளில் போலீசார் இன்று காலை அதிரடிசோதனை மேற்கொண்டனர்.
இன்று காலை 8 மணிக்கு அனைத்து வீடுகளிலும் ஒரே நேரத்தில் போலீசார் சோதனையைத் தொடங்கினர்.
மதுரை அருகே உள்ள சோழவந்தானில் தான் மணியத்தின் வீடு உள்ளது. அங்கு சோதனை நடத்திய போலீசார்அங்கிருந்து சில புகைப்படங்கள், வீடியோ கேசட்டுகள் போன்றவற்றைக் கைப்பற்றினர்.
மதுரை-புதூரில் உள்ள பூமிநாதனின் வீட்டில் சில கேசட்டுகளைக் கைப்பற்றியுள்ளதாக சோதனை முடிந்த பின்னர்க்யூ பிராஞ்ச் போலீசார் இன்று மாலை தெரிவித்தனர். சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்த மதிமுக மாநாட்டில்வைகோ பேசிய விவரங்கள் அந்தக் கேசட்டில் உள்ளதாகத் தெரிகிறது.
மதுரை-நேதாஜி சாலையில் உள்ள மதிமுக அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போதுவிடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் கொண்ட வாழ்த்து மடல் மற்றும் சிலபோஸ்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதே போல் மதுரையில் உள்ள வீர இளவரசன், கணேசன் ஆகியோர் வீடுகளிலும், திருமங்கலத்தில் உள்ளஅழகுசுந்தரம், நாகராஜன் ஆகியோரின் வீடுகளிலும், காரைக்குடியில் உள்ள செவந்தியப்பன் வீட்டிலும் போலீசார்சோதனை மேற்கொண்டனர்.
ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை சோதனை நடைபெற்றதாக க்யூ பிராஞ்ச் போலீசார்தெரிவித்தனர்.
ஆவணங்கள் சிக்கவில்லை:
இதற்கிடையே ஈரோட்டில் கணேசமூர்த்தியின் வீட்டில் இன்று சோதனை நடத்திய போலீசார் அங்கு ஆவணங்கள்ஏதும் கிடைக்காமல் வெளியேறினர்.
இன்று காலை 8 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட டி.எஸ்.பி. ஜான் செல்லையா தலைமையில் ஈரோடு சென்ற க்யூபிராஞ்ச் போலீசார் பெரியார் நகரில் உள்ள கணேசமூர்த்தியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
கணேசமூர்த்தியின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் அப்போது அங்கு இருந்தனர். சுமார் 9.45 மணி வரைபோலீசார் அங்கு சோதனை நடத்தினர்.
பின்னர் ஆவணங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் வெளியே வந்த க்யூ பிராஞ்ச் போலீசார், நாங்கள் தேடி எந்தஆவணமும் கிடைக்கவில்லை என்று கணேசமூர்த்தியின் வக்கீலிடம் எழுதிக் கொடுத்து விட்டுச் சென்று விட்டனர்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications