For Daily Alerts
Just In
அனுமதியில்லாமல் தொண்டர்களின் வீடுகளிலும் ரெய்ட்
சென்னை:
மதிமுக தலைவர் வைகோ மற்றும் பிரமுகர்களின் இல்லங்களில் மட்டும் ரெய்ட் நடத்த நீதிபதியிடம் அனுமதி வாங்கிய க்யூபிராஞ்ச் போலீசார் பல மதிமுக தொண்டர்கள் வீடுகளிலும் அனுமதியில்லாமல் நுழைந்து சோதனை நடத்தி வருவதாகத்தெரிகிறது.
வைகோ, அவரது வீடுகள், கட்சி அலுவலகம், 8 மதிமுக பிரமுகர்களின் வீடுகள் என மொத்தம் 12 இடங்களில் மட்டுமே சோதனைநடத்த அனுமதி கோரி மனு செய்திருந்தது க்யூ பிராஞ்ச். இதை நீதிமன்றமும் ஏற்று அனுமதி வழங்கியது.
ஆனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களில் மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரின் வீடுகளிலும் நீதிமன்றவாரண்ட் இல்லாமல் திடீரென புகுந்துள்ளன க்யூ பிராஞ்ச் படைகள்.
இதுவரை 3 தொண்டர்களின் வீடுகளில் நுழைந்து சில பொருள்களை எடுத்துள்ளதாகவும் அதை அதிகாரப்பூர்வமாக எழுதித் தரபோலீசார் மறுப்பதாகவும் மதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
Comments
Story first published: Friday, May 24, 2002, 5:30 [IST]