போலீஸ் தான் காரணம்: ஸ்டாலின், அன்பழகன்
சென்னை:
மதுரையில் நெசவாளர்களுக்கு கஞ்சி வழங்கிக் கொண்டிருந்த திமுகவினர் மீது போலீசார் அராஜகத்தைக்கட்டவிழ்த்து உள்ளனர் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
பசி, பட்டினியில் வாடிக் கொண்டிருக்கும் ஏழை நெசவாளர்களுக்காக திமுக ஏற்பாடு செய்திருந்த கஞ்சி வழங்கும்நிகழ்ச்சியில் அதிமுகவினருடன் போலீசாரும் சேர்ந்து கொண்டு திமுகவினரைக் காட்டுமிராண்டித்தனமாகத்தாக்கியுள்ளனர்.
இதில் பல திமுகவினரின் மண்டை உடைக்கப்பட்டதோடு முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்,மதுரை மேயர் செ. ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரையும் போலீசார் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
போலீசாரே கஞ்சியை ரோட்டில் கொட்டிவிட்டு அராஜம் செய்தது கேவலமான செயல். போலீசாரின் இந்த அராஜகநடவடிக்கை ஜனநாயக உரிமைகளையே பறிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
திமுக நிகழ்ச்சி நடத்தும் இடத்துக்கு மிக அருகே அதிமுகவினர் நிகழ்ச்சி நடத்த அனுமதித்தது ஏன் என்றுகேட்டுள்ளார் அன்பழகன்.
ஸ்டாலின் பேட்டி:
மதுரையில் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் அதிமுகவினரின் தாக்குதலில் இருந்து தப்பிய ஸ்டாலின் பின்னர்திண்டுக்கல்லில் திமுகவினர் ஏற்பாடு செய்திருந்த கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அங்கு நிருபர்களிடம் பேசிய அவர்.
திமுகவின் கஞ்சி வழங்கும் திட்டத்தை அரசின் உத்தரவின்பேரில் போலீசார் தடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
திமுகவினர் பல வாரம் கேட்டு கேட்டுத் தான் கஞ்சித் திட்டத்துக்கு போலீஸ் அனுமதி தருகிறது. ஆனால், நாங்கள் நிகழ்ச்சிநடத்தும் இடத்துக்கு அருகே பிரியாணி வழங்க அதிமுகவினரை போலீசார் கடைசி நேரத்தில் அனுமதிக்கின்றனர். இதன்மூலம்வன்முறைக்கு வித்திடுவதே போலீஸ் தான்.
நான் அங்கு போயிருந்தால் நெசவாளர்களுக்கு தேவையில்லாத தொல்லை நேர்ந்திருக்கும். இதனால் தான் நான் திரும்பிவந்துவிட்டேன். என்னை அந்த நிகழ்ச்சிக்குப் போக வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தவில்லை. கட்சிக்காரர்கள் தான்அறிவுறுத்தினர்.
நாங்கள் தான் ஸ்டாலினைத் தடுத்து அவரைக் காப்பாற்றினோம் என்று போலீசார் கூறுவதாகக் கேள்விப்பட்டேன். பொய்சொல்வதில் போலீசுக்கு நிகர் யாரும் கிடையாது.
கலவரத்தை நடத்தியதே மதுரை கமிஷ்னர் சூர்யபிரகாஷ் தான். அவருக்கு மேலிடத்தில் இருந்து நெருக்குதல் வந்துள்ளது.இதனால் வன்முறையைத் தூண்டிவிட்டுள்ளார் என்றார் ஸ்டாலின்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications