போலீஸ் தான் காரணம்: ஸ்டாலின், அன்பழகன்
சென்னை:
மதுரையில் நெசவாளர்களுக்கு கஞ்சி வழங்கிக் கொண்டிருந்த திமுகவினர் மீது போலீசார் அராஜகத்தைக்கட்டவிழ்த்து உள்ளனர் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
பசி, பட்டினியில் வாடிக் கொண்டிருக்கும் ஏழை நெசவாளர்களுக்காக திமுக ஏற்பாடு செய்திருந்த கஞ்சி வழங்கும்நிகழ்ச்சியில் அதிமுகவினருடன் போலீசாரும் சேர்ந்து கொண்டு திமுகவினரைக் காட்டுமிராண்டித்தனமாகத்தாக்கியுள்ளனர்.
இதில் பல திமுகவினரின் மண்டை உடைக்கப்பட்டதோடு முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்,மதுரை மேயர் செ. ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரையும் போலீசார் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
போலீசாரே கஞ்சியை ரோட்டில் கொட்டிவிட்டு அராஜம் செய்தது கேவலமான செயல். போலீசாரின் இந்த அராஜகநடவடிக்கை ஜனநாயக உரிமைகளையே பறிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
திமுக நிகழ்ச்சி நடத்தும் இடத்துக்கு மிக அருகே அதிமுகவினர் நிகழ்ச்சி நடத்த அனுமதித்தது ஏன் என்றுகேட்டுள்ளார் அன்பழகன்.
ஸ்டாலின் பேட்டி:
மதுரையில் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் அதிமுகவினரின் தாக்குதலில் இருந்து தப்பிய ஸ்டாலின் பின்னர்திண்டுக்கல்லில் திமுகவினர் ஏற்பாடு செய்திருந்த கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அங்கு நிருபர்களிடம் பேசிய அவர்.
திமுகவின் கஞ்சி வழங்கும் திட்டத்தை அரசின் உத்தரவின்பேரில் போலீசார் தடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
திமுகவினர் பல வாரம் கேட்டு கேட்டுத் தான் கஞ்சித் திட்டத்துக்கு போலீஸ் அனுமதி தருகிறது. ஆனால், நாங்கள் நிகழ்ச்சிநடத்தும் இடத்துக்கு அருகே பிரியாணி வழங்க அதிமுகவினரை போலீசார் கடைசி நேரத்தில் அனுமதிக்கின்றனர். இதன்மூலம்வன்முறைக்கு வித்திடுவதே போலீஸ் தான்.
நான் அங்கு போயிருந்தால் நெசவாளர்களுக்கு தேவையில்லாத தொல்லை நேர்ந்திருக்கும். இதனால் தான் நான் திரும்பிவந்துவிட்டேன். என்னை அந்த நிகழ்ச்சிக்குப் போக வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தவில்லை. கட்சிக்காரர்கள் தான்அறிவுறுத்தினர்.
நாங்கள் தான் ஸ்டாலினைத் தடுத்து அவரைக் காப்பாற்றினோம் என்று போலீசார் கூறுவதாகக் கேள்விப்பட்டேன். பொய்சொல்வதில் போலீசுக்கு நிகர் யாரும் கிடையாது.
கலவரத்தை நடத்தியதே மதுரை கமிஷ்னர் சூர்யபிரகாஷ் தான். அவருக்கு மேலிடத்தில் இருந்து நெருக்குதல் வந்துள்ளது.இதனால் வன்முறையைத் தூண்டிவிட்டுள்ளார் என்றார் ஸ்டாலின்.
-
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
T Nagar: சீட்டே இல்லை! பதவி எதுக்கு? ராஜினாமா செய்த திநகர் எம்எல்ஏ ஜெ.கருணாநிதி! -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்!












Click it and Unblock the Notifications