விரைவில் மேலும் சில ரெய்டுகள்
மதுரை:
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகக் கருதப்படும் மேலும் பலருடைய வீடுகளில் அடுத்த ஒரு வாரத்திற்குள்சோதனை நடத்தப்படும் என்று க்யூ பிராஞ்ச் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் கைது செய்யப்பட்டுள்ள அக்கட்சிப் பிரமுகர்களின் வீடுகள்,அக்கட்சியின் அலுவலகங்கள் மற்றும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் மற்றும் அவருடையஅலுவலகம் ஆகியவற்றில் நேற்று க்யூ பிராஞ்ச் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
புலிகளை இவர்கள் ஆதரித்து வருவதற்கான நிறைய ஆவணங்கள் தங்களுக்குக் கிடைத்திருப்பதாகப் போலீசார்கூறுகின்றனர்.
மதிமுகவினரின் இடங்களில் சோதனையிட்ட போது கிடைத்த ஆவணங்களை விட நெடுமாறனின் வீட்டிலும்அலுவலகத்திலும் எங்களுக்கு அதிக ஆவணங்கள் கிடைத்துள்ளன என்றும் க்யூ பிராஞ்ச் போலீசார் நமதுநிருபரிடம் தெரிவித்தனர்.
புலிகளை ஆதரித்து வரும் மேலும் சிலரின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் அடுத்த ஒரு வாரத்திற்குள்சோதனைகள் நடக்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications