கோவில் காணிக்கைக்கு முதுமலையிலிருந்து யானைக்குட்டி வாங்கும் சசிகலா
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
கோவிலுக்குக் காணிக்கை அளிப்பதற்காக முதுமலை காட்டிலிருந்து ஒரு யானைக் குட்டியை விலைக்குவாங்குகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா.
ஜெயலலிதாவும் சசிகலாவும் அடிக்கடி கோவில்களுக்குக் காணிக்கையாக யானைகளை அளிப்பது வழக்கம்.
அதன்படி கோவிலுக்குக் காணிக்கை அளிப்பதற்காக முதுமலை காட்டிலுள்ள தெப்பக் காடு யானைகள்முகாமிலிருந்து ஒரு பெண் யானைக் குட்டியை விலைக்கு வாங்க சசிகலா முடிவு செய்துள்ளார்.
கும்பகோணம் அல்லது சென்னையில் உள்ள ஒரு பிரபலமான கோவிலுக்கு இந்தப் பெண் யானைக் குட்டியைசசிகலா காணிக்கையாக வழங்கவுள்ளார்.
ஆடி மாதம் முடிந்ததும் முதுமலைக் காட்டிலிருந்து இந்தப் பெண் யானையைக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.












Click it and Unblock the Notifications