பெட்ரோல் பங்க் ஊழல்: நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைப்பு
டெல்லி:
பெட்ரோல் பங்க் ஊழல் தொடர்பாக எதிர்க் கட்சிகள் இன்றும் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின்இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
பெட்ரோல் பங்க்குகள் மற்றும் கேஸ் ஏஜென்சிகள் ஒதுக்கப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதால் பெட்ரோலியத்துறைஅமைச்சர் ராம் நாயக் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த 10 நாட்களாக எதிர்க் கட்சிஎம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
இதனால் கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டன.
நாளை மறுநாளுடன் (ஆகஸ்டு 14) நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் முடிவதாக இருந்தது.இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் எம்.பிக்கள் இவ்வாறு தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் ஒன்று-தொடர்ந்து எந்தவிதமான அலுவலும் இல்லாமலே அவையை நடத்தலாம். அல்லது- காலவரையின்றி அவையைஒத்திவைக்கலாம். இந்த இரண்டு வாய்ப்புக்கள் தான் என்னிடம் இருந்தன என்று கூறிய லோக் சபா சபாநாயகர்மனோகர் ஜோஷி காலவரையின்றி ஒத்திவைப்பது தான் சரி என்று ஒத்திவைத்து விட்டார்.
ராஜ்யசபாவிலும் எதிர்க் கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பி கத்திக் கொண்டே இருந்ததால் அவையின்துணைத் தலைவரான நஜ்மா ஹெப்துல்லா அவை நடவடிக்கைகளை காலவரையின்றி ஒத்திவைத்தார்.