3 முறை முதல்வராக இருந்தவர்
டெல்லி:
இந்தியாவின் துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைரோன் சிங் ஷெகாவத் 3 முறை ராஜஸ்தான்மாநில முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.
1923ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்திலுள்ள கச்சார்யவாஸ் என்ற குக்கிராமத்தில்பிறந்தார் ஷெகாவத்.
சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்ட குடும்பத்தின் மூத்த பிள்ளையான ஷெகாவத், குடும்பத்தைக்காப்பதற்காக பள்ளிப் படிப்பை முடித்தவுடனேயே காவல்துறையில் சேர்ந்தார்.
இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பின்னர் போலீஸ் வேலையை உதறி விட்டு அரசியலில் குதித்தார்.போட்டியிட்ட முதல் சட்டசபைத் தேர்தலிலேயே வெற்றி பெற்று 1952ல் எம்.எல்.ஏவானார் ஷெகாவத்.
அதன் பிறகு படிப்படியாக முன்னேறி அரசியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ள ஷெகாவத், பாரதீய ஜனதாகட்சியில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர். முக்கியமானவரும் கூட.
தன்னுடைய சுமார் 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் ஷெகாவத் நண்பர்களைச் சம்பாதித்தது தான் மிகவும்அதிகம். அந்த அளவுக்கு அவர் யாரையும் எதிரியாக நினைத்ததே கிடையாது.
அவருடைய இந்த நீண்ட கால அரசியல் பயணம் ஷெகாவத்துக்கு இந்தியாவின் துணை ஜனாதிபதி பதவியைப்பெற்றுத் தந்துள்ளது.












Click it and Unblock the Notifications