சென்னை, கன்னியாகுமரியில் கனமழை, கடல் கொந்தளிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரில் நேற்றிரவு 7 மணியளவில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறுபகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

சென்னை நகரில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழைப் பொழிவு குறைவாகவே இருக்கிறது. இருப்பினும்கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந் நிலையில், இரவு 7 மணிக்கு மேல் கன மழை பெய்தது.

பலத்த இடி மற்றும் கண்ணைப் பறிக்கும் மின்னலுமாக சுமார் அரை மணி நேரம் இந்த கன மழை பெய்தது.இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நின்றது.

இந்த மழை காரணமாக பகலில் நலவிய கடும் வெப்பம் குறைந்து குளுமை பரவியது. பல இடங்களில் மரங்கள்கீழே விழுந்ததில் தொலைபேசி இணைப்புகள், மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

இதனால் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த மழையினால் சென்னையின் குடிநீர்தேக்கங்களில் ஓரளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் குடிநீர்ப் பஞ்சம் ஓரளவு தீரும் என்று தெரிகிறது.

கன்னியாகுமரியில்...

அதே போல கன்னியாகுமரியிலும் நேற்று பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. இதனால் கடலில் கொந்தளிப்பும் ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+