முந்திரிக் காட்டில் "பாபா" படப் பெட்டி: 2 பேர் கைது
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டத்தில் தியேட்டரில் இருந்து கடத்தப்பட்ட பாபா படப் பெட்டி முந்திரிக் காட்டில்புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ரஜினியை டாக்டர் ராமதாஸ் விமர்சித்திருந்ததன் பின்னணியில் வியாழக்கிழமை ஜெயங்கொண்டத்தில் பாபாவெளியிடப்படவிருந்த தியேட்டரில் தாக்குதல் நடத்திய 25 பேர் கொண்ட கும்பல் படச் சுருள் அடங்கியபெட்டியை அதிரடியாகக் கடத்திச் சென்றது.
இதைக் கண்டுபிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந் நிலையில் பாபாபடப் பெட்டியைத் திருடிய 2 பேரை போலீஸார் பிடித்துள்ளனர். படப் பெட்டியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை ஜெயங்கொண்டம் போலீஸாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில்பேசியவர் 2 பேர் சேர்ந்து படப் பெட்டி போன்ற ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு சின்னவலயம் கிராமத்தில்உள்ள முந்திரிக் காட்டுக்குள் சென்று கொண்டிருந்ததாக கூறினார்.
இதையடுத்து போலீஸார் காட்டுக்கு விரைந்து சென்று சோதனையிட்டர். அப்போது படப் பெட்டி மண்ணில்புதைந்து கிடந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்தப் பெட்டியைக் கடத்திச் சென்றதாக அறிவழகன் மற்றும் பாரி ஆகிய இருவரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications