For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சத்தியமூர்த்தி பவனுக்கே இடம் மாறும் காங்கிரஸ் அலுவலகம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் மீண்டும் "சத்தியமூர்த்தி பவனு"க்கே இடம் பெயருகிறது.

கடந்த 1996ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பிறந்தது. அப்போது,காங்கிரஸ் கட்சியின் அலுவலகமாக இருந்த "சத்தியமூர்த்தி பவன்" உள்ளிட்ட காங்கிரஸ் சொத்துக்களைதமாகாவின் தலைவரான மூப்பனார் கைப்பற்றிக் கொண்டார். அதற்குப் பிறகு அவற்றைத் திரும்ப காங்கிரஸிடம்ஒப்படைக்கவில்லை.

இப்போது காங்கிரஸ் கட்சியில் தமாகா இணைந்து விட்டது. ஒரே காங்கிரஸ் தான் இப்போது தமிழகத்தில் உள்ளது.எனவே எப்போது "சத்தியமூர்த்தி பவனு"க்கு காங்கிரஸ் தலைமையகம் இடம் மாறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு பதிலளித்து தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம்கூறுகையில்,

"சத்தியமூர்த்தி பவனு"க்கு விரைவில் காங்கிரஸ் அலுவலகம் இடம் மாறி விடும்.

தற்போது அங்கு சில பராமப்புப் பணிகள் நடந்து வருகின்றன. அவை முடிந்தவுடன் அங்கு சென்று விடுவோம்என்றார் இளங்கோவன்.

"சத்தியமூர்த்தி பவன்" தவிர, "காமராஜ் பவன்", "காமராஜர் அரங்கம்" உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களும் தமாகாவசம் இருந்தன. இப்போது அவை அனைத்தும் காங்கிரஸ் வசம் மீண்டும் வரப் போகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X