அதி பயங்கர திருவிழா
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பேரையூர் கிராமத்தில் குழந்தைகளையும் வயதுக்கு வராதசிறுமிகளையும் உயிருடன் மண்ணில் புதைத்து சில நிமிடங்களுக்குப் பிறகு மீட்கும் அதி பயங்கரமான கோவில்விழா நடந்தது.
ந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைராஜும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரையூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் வயதுக்கு வராத சிறுமிகள் சீக்கிரம் வயதுக்கு வர வேண்டும்என்று வேண்டியும் குழந்தைகளின் நோய் தீரவும் முத்துக்காளி அம்மன் மற்றும் காளியம்மனுக்கு நேர்த்திக் கடன்செய்கிறார்கள்.
நேற்று (புதன்கிழமை) நடந்த இந்தக் கோவில் விழாவின்போது வயதுக்கு வராத சிறுமிகளை உயிருடன்மண்ணுக்குள் புதைத்து, மேலே மண்ணைப் போட்டு மூடினர். பின்னர் சில விநாடிகளுக்குப் பிறகு மீண்டும்அவர்களை வெளியே எடுத்தனர்.
அதிபயங்கரமான இந்த நிகழ்ச்சியில் 105 சிறுமிகள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தக் கோவில் விழாவின் சிறப்புஅழைப்பாளராக அமைச்சர் துரைராஜ் அழைக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும் குழந்தைகள், சிறுமிகளை மண்ணுக்குள் புதைக்கும்போது அவர் அங்கு இல்லை.
குழி மாற்றுத் திருவிழா என்று இது அழைக்கப்படுகிறது. இந்த விழாவில் பேரையூர் மற்றும் சுற்றுக் கிராமத்தினர்கலந்து கொள்கின்றனர். வயதுக்கு வராத சிறுமிகள் உள்ள வீட்டினர் கட்டாயம் இதில் கலந்துகொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படுமாம்.
குழிக்குள் இறக்கி விடப்படும் சிறுமிகளின் மீது திருநீறு பூசுகிறார்கள். பிறகு மஞ்சள் துணியை உடலைச் சுற்றிலும்கட்டுகிறார்கள். பின்னர் கோவிலுக்கு முன்பு தோண்டப்பட்டுள்ள குழிகளுக்கு கொண்டு செல்கிறார்கள். தாய்மாமன்கள் தலைமையில் சிறுமிகள் ஊர்வலமாக கூட்டி வரப்படுகிறார்கள். வீட்டிலிருந்தே மண் வெட்டிகளுடன்ஊர்வலமாக வருகின்றனர்.
கோவிலை அடைந்தவுடன் பள்ளம் தோண்டப்படுகிறது. அதன் பிறகு பூசாரிகளின் முழக்கங்களுக்கு மத்தியில்சிறுமி அல்லது குழந்தை குழியில் வைத்துப் புதைக்கப்படுகிறார்கள்.
பின்னர் புதைத்த இடத்தில் தேங்காய் உடைத்து, சூடம் காட்டி பூஜை நடத்துகிறார்கள். சரியாக ஒரு நிமிடத்திற்குப்பிறகு குழியைத் திறக்கலாம் என்று பூசாரி உத்தரவிட்டவுடன் வேகம் வேகமாக குழி தோண்டப்படுகிறது. உள்ளேஉள்ள குழந்தை அல்லது சிறுமி வெளியே எடுக்கப்படுகிறார்கள். அதன் பிறகு அந்தக் குழந்தைக்கும் சூடம் காட்டிபூஜை செய்கிறார்கள்.
இந்த விநோத திருவிழா 400 ஆண்டுகளாக இப்பகுதியில் நடந்து வருகிறதாம். ஆனால் இதுவரை எந்தசிறுமிக்கும், குழந்தைக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை என்கிறார்கள்.
மேலும் விழாவில் கலந்து கொண்ட சிறுமிகள் விரைவிலேயே பூப்பெய்தி விடுவார்கள் என்று கிராமத்தினர்நம்புகின்றனர்.
இந்தக் காலத்திலும் இப்படி ஒரு விநோதமா?
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications