For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவுக்கு ப.சிதம்பரம் அறிவுரை

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ள ஒரே காரணத்துக்காக முதல்வர் ஜெயலலிதா, நீதித்துறை உள்பட யாரையும் மதிக்காமல் மிகஅலட்சியமாக நடந்து வருகிறார். இது நல்லதல்ல என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் தலைவர் ப.சிதம்பரம் கூறினார்.

திருச்சியில் நிருபர்களிடம் பேசிய அவர்,

மிக முக்கிய முடிவுகளை எடுக்கும்போது அதில் சம்பந்தப்பட்டவர்களுடன் அரசுகள் கலந்து ஆலோசிப்பது வழக்கம். ஜனநாயகத்தில் அதுமிகவும் அவசியமானதும் கூட. ஆனால், தமிழக அரசின் செயல்பாடுகள் ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கி வருகின்றன.

நீதிமன்றங்களின் கட்டணத்தை தமிழக அரசு பல மடங்கு உயர்த்தியுள்ளது. இது குறித்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்துடனும்,வழக்கறிஞர்களுடனும் கலந்து பேசியிருக்க வேண்டும்.

ஆனால், இந்த கட்டண உயர்வு தொடர்பான உத்தரவை மிக ரகசியமாகத் தயாரித்து, அதை 13, 14 நாட்கள் மிக ரகசியமாக வைத்திருந்துவெளியிட்டுள்ளார்கள். உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குக் கூட இது தெரிவிக்கப்படவில்லை.

இதன்மூலம் நீதித்துறையை அரசு அலட்சியப்படுத்திவிட்டது. இது மிகவும் கண்டனத்திற்குறியது. இதை எதிர்த்து வழக்கறிஞர்கள் நடத்திவரும் போராட்டம் நியாயமானது.

அதே போலத்தான் அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்ளுடன் இணைப்பதிலும் அரசு யாருடனும் கலந்து பேசாமல் தன்னிச்சையாகமுடிவெடுத்துள்ளது.

பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகளை இணைத்துவிட்டுவிடுவதன் மூலம் உயர் கல்விக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைஎன்னும் ரீதியில் தமிழக அரசு நடந்து கொண்டுள்ளது என்றார் சிதம்பரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X