Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடக மாஜி அமைச்சர், போலீஸ்காரரை கடத்தினான் வீரப்பன்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் ஜனதா தளத் தலைவர்களில் ஒருவருமான எச். நாகப்பாவை சந்தன வீரப்பன் கடத்திச் சென்றான்.அவருக்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸ்காரரையும் வீரப்பன் கடத்தினான்.

நேற்று இரவு 10.30 மணியளவில் மைசூர் அருகே உள்ள சாம்ராஜ்பேட்டை- கொள்ளேகால் காட்டுப் பகுதியில் உள்ள அவரது பண்ணைவீட்டில் இருந்து அவரைத் தூக்கிச் சென்றான் வீரப்பன்.

வீரப்பனின் நடமாட்டம் நிறைந்த சத்தியமங்கலம் காட்டுப் பகுதியை ஒட்டியுள்ள இந்தப் பகுதியில் காமகரே என்ற கிராமத்தில்நாகப்பாவுக்கு பண்ணை வீடு உள்ளது. இங்கு தனது பேரனுக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சிக்காக மனைவி பரிமளா மற்றும் குடும்பத்துடன்வந்திருந்தார் நாகப்பா.

முகமூடியுடன் வந்த வீரப்பன்:

இரவில் அனைவரும் தூங்க ஆரம்பித்த நிலையில் 8 பேர் கொண்ட வீரப்பனின் கும்பல் அங்கு வந்தது. அவர்கள் அனைவரும் முகமூடிஅணிந்திருந்தனர்.

வீரப்பனும் கும்பலும் வீட்டுக் கதவைத் தட்டினர். அப்போது நாகப்பாவின் பாதுகாப்புக்கு இருந்த இரு போலீஸ்காரர்களும் வெளியேஎட்டிப் பார்த்தனர். முகமூடிக் கும்பலைப் பார்த்தவுடன் அவர்கள் கதவை உள்பக்கமாகப் பூட்டினர்.

போலீசுடன் துப்பாக்கி சண்டை:

ஆனால், வீரப்பனுன் அவனது ஆட்களும் வீட்டின் கதவை துப்பாக்கியால் சுட்டனர். இதில் கதவு தூள் தூளானது. இதையடுத்துபோலீஸ்காரர்களும் வீரப்பன் கும்பலை நோக்கி சுட்டனர். ஆனால், 8 பேர் துப்பாக்கிகளுடன் சுட ஆரம்பித்ததால் 2 போலீஸ்காரக்களால்சமாளிக்க முடியவில்லை.

பின்னர் உள்ளே நுழைந்த வீரப்பன் முதலில் போலீஸ்காரர்களைத் தாக்கினான். போலீசார் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுடுவதற்குமுன் இருவரையும் வீரப்பனின் ஆட்கள் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்துவிட்டனர்.

பின்னர் நாகப்பாவை உடன் வருமாறு வீரப்பன் அழைத்தான்.

ஆனால், நாகப்பா உடன் செல்ல மறுத்தார். அவரது மனைவி வீரப்பனின் காலில் விழுந்து விட்டுவிடுமாறு கெஞ்சினார்.

கயிற்றால் கட்டி...

ஆனால், பரிமளாவை எட்டி உதைத்த வீரப்பன், நாகப்பாவை தனது ஆட்களைக் கொண்டு கயிற்றால் கட்டினான். பின்னர் ஒருபோலீஸ்காரரையும் கையைக் கட்டினான். நாகப்பா தொடர்ந்து முரண்டு பிடிக்கவே அவரை தூக்கிகுண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்றதுவீரப்பன் கும்பல். அவர் அப்போது செருப்பு கூட அணியவில்லை. போலீஸ்காரரையும் துப்பாக்கி முனையில் வீரப்பன் கடத்திச் சென்றான்.

பஸ்சில் ஏற்றி...

பின்னர் அந்த வழியே சென்ற பேருந்தை நிறுத்தி அதில் நாகப்பாவையும் போலீஸ்காரரையும் ஏற்றிக் கொண்டு சென்றதாகவும் சிறிது தூரம்சென்றவுடன் பஸ்சில் இருந்து இருவரையும் இறக்கி காட்டுக்குள் இழுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

வீரப்பனின் இந்த முட்டாள் தனத்தால் கர்நாடகத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் இடையே பீதி பரவி வருகிறது.கடந்த ஜே.எச். படேலின் ஜனதா தள அரசில் விவசாயப் பொருள்கள் விற்பனைத்துறை அமைச்சராக இருந்தவர் நாகப்பா என்பதுகுறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+