நாகப்பாவை மீட்க ரஜினி காட்டுக்கு போகலாமே: ராமதாஸ் யோசனை
டெல்லி:
நாகப்பாவை மீட்க ரஜினிகாந்தை காட்டுக்குள் அனுப்பலாம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
டெல்லியில் நேற்று துணைப் பிரதமர் அத்வானியைச் சந்தித்துப் பேசிய அவர் பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
வீரப்பனிடம் இருந்து நாகப்பாவை மீட்க கன்னடம், தமிழ் ஆகிய இரு மொழிகள் தெரிந்த ஒருவரை அனுப்பலாமா? என்றுபத்திரிக்கையாளர்கள் கேட்டனர்.
இதற்குப் பதிலளித்த ராமதாஸ், இது மிக நல்ல யோசனை, இரு மொழி தெரிந்த ஒரு நடிகரை வீரப்பனிடம் அனுப்பலாம். அதுரஜினிகாந்தாகக் கூட இருக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
ராஜ்குமார் கடத்தப்பட்டபோது இரு மாநில அரசுகளும் எவ்வளவு தீவிரமான நடவடிக்கைகள் எடுத்தனவோ அதே மாதிரியானநடவடிக்கைகளை இப்போதும் எடுக்க வேண்டும். நாகப்பாவை வீரப்பனிடம் இருந்து மீட்டாக வேண்டும்.
ராஜ்குமார் அளவுக்கு இவர் முக்கியஸ்தர் இல்லை என்பதற்காக இரு மாநில அரசுகளும் மெத்தனாக இருக்கக் கூடாது. நாகப்பாவை மீட்டாகவேண்டும் என்றார் ராமதாஸ்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது காட்டுக்குப் போய் வீரப்பனைச் சந்திக்கத் தயார் என்று ரஜினி கூறியது நினைவுகூறத்தக்கது.மேலும் பலமுறை பெங்களூர் வந்த ரஜினி, கர்நாடக முதல்வர் மற்றும் ராஜ்குமார் குடும்பத்தினரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.வீரப்பன் பெரும் அளவில் பணம் கேட்டபோது அதைத் தருவதற்காக கர்நாடக சினிமா பிரபலங்களுடனும் பேச்சு நடத்தினார் ரஜினி என்பதுகுறிப்பிடத்தக்கது.
அப்போது வீரப்பனுக்குச் சென்ற பெரும் பணம் சினிமா வட்டாரத்தில் இருந்து சென்றது என்பதும் நினைவுகூறத்தக்கது.
பணம் கொடுக்க கெளடா யோசனை:
ராஜ்குமாரை மீட்பதற்காக கோடிக்கணக்கில் பணத்தை வீரப்பனுக்குத் தந்தார்கள். அதே போல இப்போதும் பணம் தந்து நாகப்பாவை மீட்கவேண்டும் என முன்னாள் பிரதமர் தேவே கெளடா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications